அம்பானி சகோதரர்கள் சமரசம்!

கோதாவரி ஆற்றுப் படுகையில் இருந்து எடுக்கப்படும் இயற்கை எரிவாயு பங்கீட்டு விவகாரத்தில் அம்பானி சகோதரர்களிடையே தகராறு ஏற்பட்டு, விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை போனது.
இந்த வழக்கின் முடிவில், அம்பானி சகோதரர்கள் செய்துகொண்ட குடும்ப ஒப்பந்தம் செல்லாது என்று கடந்த மாதம் உச்சநீதிமன்றம் அறிவித்தது. மேலும், 6 வார காலத்திற்குள் அவர்கள் சட்டப்பூர்வமாக ஏற்கக்கூடிய வகையில் புதிய ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில், அம்பானி சகோதரர்கள் தாங்கள் ஏற்கெனவே செய்துகொண்ட இயற்கை எரிவாயு தொடர்பான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளனர். இத்தகவலை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனமும், அனில் அம்பானி குழுமமும் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
இதையடுத்து அம்பானி சகோதரர்கள் இனி சுமூகமான முறையில் செயல்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினால் அனில் அம்பானி வசம் உள்ள நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன. இப்போது சகோதரர்கள் இருவரும் சமரசமாகிவிட்டதால், ரிலையன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி நிறுவனங்களின் பங்குகள் விலை நாளை உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications