மங்களூர் விமான விபத்து - ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி சிக்கியது

துபாயிலிருந்து நேற்று காலை மங்களூர் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (IX-812) விமானம் பாஜ்பே விமான நிலையத்தில் தரையிறங்கியபோது எதிர்பாராதவிதமாக தடுமாறி ரன்வேயைத் தாண்டி ஓடி, பள்ளத்தாக்கில் விழுந்து, இரண்டாக உடைந்து வெடித்துச் சிதறியது. இந்தக் கோர விபத்தில் 158 பேர் உயிரிழந்தனர். 8 பேர் உயிருடன் தப்பினர்.
விபத்தைத் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டன. தீயணைப்புப் படையினர் தீயை அணைத்து கருகிப் போய் விட்ட உடல்களை மீட்டனர். நேற்று மாலையில் 158 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு விட்டன.
அதன் பின்னர் அவற்றை அடையாளும் காணும் பணிகள் நடந்தன. இதில் 36 உடல்களைத் தவிர மற்றவர்களின் அடையாளம் காணப்பட்டு விட்டது. இவர்களின் உடல்களில் டிஎன்ஏ சோதனை நடத்தி உடலை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
உடல்களை அடையாளம் காணும் பணிக்காக ஹைதராபாத்திலிருந்து தடயவியல் நிபுணர்கள் மங்களூரில் முகாமிட்டுள்ளனர். இறந்தவர்களின் கை ரேகைகளை அவர்கள் பதிவு செய்து அதன் மூலம் உடல்களை அடையாளம் கண்டு வருகின்றனர். இறந்தவர்களில் 23 பேர் கைக்குழந்தைகள் மற்றும் சிறார்கள் எனத் தெரிய வந்துள்ளது.
கருப்புப் பெட்டி சிக்கியது
விபத்துக்கான காரணத்தை அறிய உதவும் கருப்பு்ப பெட்டியை தேடுதல் படையினர் தேடிவந்தனர். இந்த நிலையில் இன்று முற்பகல் வாக்கில் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது.
கருப்புப் பெட்டியை மும்பை அல்லது பெங்களூருக்கு அனுப்பி வைத்து பரிசோதனை செய்யப்படவுள்ளது.
கருப்புப் பெட்டியில், பதிவாகியுள்ள தகவல்களை வைத்து விபத்து நடந்ததற்கான காரணத்தை துல்லியமாக அறிய முடியும். காக்பிட்டில் விமானிகள் பேசியது, விமானக் கட்டுப்பாட்டு அறைக்கும், அவர்களுக்கும் இடையே நடந்த உரையாடல் ஆகியவை அதில்தான் பதிவாகியிருக்கும்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications