அமைச்சர் பொன்முடி தந்தை மரணம்: ஸ்டாலின் அஞ்சலி

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: தமிழக உயர்கல்வி மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் பொன்முடியின் தந்தை மரணமடைந்தார்.

பொன்முடியின் தந்தை கந்தசாமி (85) கடந்த ஒரு வாரமாக உடல்நலமின்றி விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந் நிலையில் சிகிச்சை பலனின்றி கந்தசாமி இன்று காலை மரணமடைந்தார். அவரது உடல் விழுப்புரம் கிழக்கு சண்முகாபுரம் காலனியில் உள்ள பொன்முடியின் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

தகவல் அறிந்த ஏராளமான திமுகவினர் மற்றும் கட்சி நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், சக அமைச்சர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

முதல்வர் கருணாநிதி தொலைபேசி மூலம் பொன்முடிக்கு ஆறுதல் கூறினார். துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், கந்தசாமியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி பொன்முடிக்கு ஆறுதல் கூறினார்.

அதே போல பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே. மணி ஆகியோரும் தொலைபேசியில் பொன்முடிக்கு ஆறுதல் கூறினர்.

கந்தசாமியின் உடல் இன்று மாலை தகனம் செய்யப்பட்டுகிறது.

கந்தசாமி, சித்தலிங்க மடத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி மரகதமும் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+