இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத இயக்கம் அறிவிப்பு!

இது குறித்து உள்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
பாகிஸ்தானை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் லஷ்கர்-இ-தொய்பா, மற்றும் தடை செய்யப்பட்ட 'சிமி' அமைப்பு போன்றவற்றுடன் தொடர்புடைய 'இந்தியன் முஜாகிதீன்' அமைப்பு டெல்லி, உத்தரபிரதேசம், பெங்களூர், மும்பை போன்ற இடங்களில் குண்டு வெடிப்பை நடத்தியுள்ளது.
இந்த அமைப்பினர், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்புடன் நேரடி தொடர்பு வைத்துள்ளனர். இவர்கள் இந்தியாவில் இதுவரை 10 குண்டு வெடிப்பு சம்பவங்களை நடத்தி, இதில் 500 பேர் வரை உயிரிழந்திருக்கிறார்கள்.
இந்த இயக்கத்தை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. இயக்கம் தான் உருவாக்கி, இதற்கு அமிர் ரேஜா என்பவர் மூலம் பண உதவி செய்துள்ளது. இப்போது இந்த இயக்கத்துக்கு இக்பால் பத்கால் என்பவர் தலைவராக இருக்கிறார்.
இந்த இயக்கம், 1967ம் ஆண்டு சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தீவிரவாத இயக்கமாக அறிவிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications