நித்தியானந்தா மீதான வழக்கு - ஸ்ரீபெரும்புதூர் கோர்ட் விசாரிக்க இடைக்கால தடை
சென்னை: நித்தியானந்தா மீது வக்கீல் ஒருவர் தொடர்ந்த வழக்கை விசாரிக்க ஸ்ரீபெரும்புதூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த வக்கீல் செல்வமணி என்பவர், ஸ்ரீபெரும்புதூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நித்தியானந்தா மீது வழக்கு தொடர்ந்தார்.
அதில், சுவாமி நித்யானந்தா தவறான முறையில் செயல்பட்டு இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளார். இதற்காக, அவர் மீது இந்திய குற்றவியல் தண்டனை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கை ஸ்ரீபெரும்புதூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டு விசாரித்து கடந்த ஏப்ரல் மாதம் நேரில் ஆஜராக நித்தியானந்தாவுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் நித்தியானந்தா ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்தது.
இதை தொடர்ந்து 9-ந்தேதி ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் மீண்டும் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையை ரத்து செய்யக் கோரியும், நேரில் ஆஜராகும் உத்தரவுக்கு தடை கேட்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தா வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை இன்று நீதிபதி சி.பி. செல்வம் விசாரித்தார். விசாரணைக்குப் பின்னர் நித்தியானந்தா நேரில் ஆஜராவதற்கும், ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் நடந்து வரும் வழக்கு விசாரணைக்கும் 3 வார கால இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி வக்கீல் செல்வமணிக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications