'தமிழ் வழக்கு மொழி': வக்கீல்கள் ஸ்டிரைக்-நீதிமன்றங்கள் ஸ்தம்பிப்பு
சென்னை: தமிழை வழக்கு மொழியாக அறிவிக்கக் கோரி தமிழகம் முழுவதும் இன்று வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் நீதிமன்றப் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளன.
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் வழக்கு மொழியாக தமிழையும் அறிவிக்க வேண்டும் என்று கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளை வக்கீல்கள் 10 நாட்களுக்கு முன்பு போராட்டத்தைத் தொடங்கினர். அன்று முதல் 6 வக்கீல்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் சலசலப்பு ஏற்பட்டது. இந்த உண்ணாவிரதப் போராட்டம் பின்னர் கோவை, புதுக்கோட்டைக்கும் பரவியது. நேற்று முதல் சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கறிஞர் ஜேசுபாலன் தலைமையில் வக்கீல்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கத்தின் அழைப்பை ஏற்று தமிழகம் முழுவதும் வக்கீல்கள், ஒரு நாள் கோர்ட் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்டிரைக் காரணமாக, சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளையில் வக்கீல்கள் யாரும் பணிக்குச் செல்லவில்லை. சென்னையில் உள்ள சைதாப்பேட்டை, ஜார்ஜ்டவுன், எழும்பூர் கோர்ட்களிலும் வக்கீல்கள் பணிக்குச் செல்லவில்லை.
இதேபோல மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் வக்கீல்கள் கோர்ட்டுக்குப் போகவில்லை. இந்த கோர்ட் புறக்கணிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் நீதிமன்றப் பணிகள் ஸ்தம்பித்துப் போயுள்ளன.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications