தமிழை வழக்கு மொழியாக்குவதற்கு என்ன சிக்கல் உள்ளது?-ஜெ.
சென்னை: பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களில் அந்த மாநிலங்களில் உள்ள ஆட்சி மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வளவு சாதகமான அம்சங்கள் இருக்கின்ற சூழ்நிலையில் ஏன் தயக்கம்? என்று கேட்டுளள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக தமிழை ஆக்குவதில் எந்தவித சட்ட சிக்கலும் கிடையாது. இந்திய குடியரசு தலைவரின் முன்அனுமதியுடன் இந்தி மொழியையோ அல்லது மாநில அலுவல்களுக்காக பயன்படுத்தப்படும் வேறு மொழியையோ அந்த மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்ற நடவடிக்கைகளில் பயன்படுத்த மாநில கவர்னர் அனுமதிக்கலாம் என்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 348 (2)-ல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போன்று, ஒரு மாநிலத்தின் கவர்னர், ஆங்கிலத்தைத் தவிர, இந்தி மொழியையோ அல்லது அந்த மாநிலத்தின் ஆட்சி மொழியையோ, அந்த மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்ற தீர்ப்புகளில் பயன்படுத்த அனுமதிக்கலாம் என்று 1963-ம் ஆண்டு ஆட்சி மொழிகள் சட்டம் பிரிவு-7ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களில் அந்த மாநிலங்களில் உள்ள ஆட்சி மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வளவு சாதகமான அம்சங்கள் இருக்கின்ற சூழ்நிலையில் ஏன் தயக்கம்?
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக ஆக்கப்பட வேண்டும் என்ற வழக்கறிஞர்களின் நியாயமான கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டி மத்திய அரசை வலியுறுத்தியும், கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள வழக்கறிஞர்கள் மீது எந்த வழக்கையும் பதிவு செய்யாமல் உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு மற்றும் மாணவர் அணியின் சார்பில், கழக அமைப்பு ரீதியான மாவட்டங்களில் திங்கட்கிழமையன்று (ஜுன் 21) காலை 10 மணி அளவில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications