இனி யூனிகோட்' தான் தமிழக அரசின் அங்கீகரிக்கப்பட்ட எழுத்துரு!
கோவை: கணினிகளில் பயன்படுத்த தமிழ் யூனிகோட்' எழுத்துருதான் தமிழக அரசின் அங்கீகரிக்கப்பட்ட எழுத்துரு என்று அரசு அறிவித்துள்ளது.
கணினிகளில் தமிழில் டைப் செய்ய பல்வேறு எழுத்துக் குறியீடுகள் (பான்ட்கள்) பயன்படுத்தப்படுகின்றன.
இதனால் எழுதுவோருக்கும் அதை கணினியில் படிப்போருக்கும் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதைக் களைய உலகின் அனைத்து கணினி மொழிகளையும் ஒன்றிணைக்க யூனிகோட் என்ற எழுத்துரு உருவாக்கப்பட்டது. இதற்காக, ஒருங்குறி கூட்டமைப்பு (யூனிகோடு கன்சார்டியம்) என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
இதில், தமிழுக்கும் குறிப்பிட்ட அலைவரிசை ஒதுக்கப்பட்டு அதற்குள் இடம்பெறும் வகையில் அனைத்து தமி்ழ் எழுத்துக்களுக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் உலகெங்கிலும் கணினிகள் ஒரே விதமான தமிழ் எழுத்துருவை டைப் செய்து பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த யூனிகோட்' எழுத்துருவை தமிழக அரசு பயன்படுத்துவது பற்றி ஆராய தமிழக அரசு மு.அனந்தகிருஷ்ணன் தலைமையில் குழுவை அமைத்தது.
அதன் பல்வேறு அம்சங்களை ஆராய்ந்த அந்த குழு, தமிழக அரசிடம் அறிக்கையை சமர்ப்பித்தது.
இதன் அடிப்படையில் கோவையில் செம்மொழி மாநாடு தொடங்கிய நாளன்று, தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மை செயலாளர் டேவிதார், ஒரு ஆணையை வெளியிட்டுள்ளார்.
அதில், இனி தமிழக அரசு, டிஏஎம் (டேம்), டிஏபி (டேப்) மற்றும் பிற பிரத்தியேக 8-பிட்' குறியீடுகளில் இருந்து 16 பிட் தமிழ் யூனிகோடுக்கு (ஒருங்குறி) மாற வேண்டும்.
16 பிட் தமிழ் யூனிகோட் மட்டுமே ஒரே அங்கீகரிக்கப்பட்ட எழுத்துக் குறியீடாக இருக்கும்.
எந்த மென்பொருள்களில் எல்லாம் தமிழ் யூனிகோடு வேலை செய்யவில்லையோ அல்லது முழுதாக தெரியவில்லையோ, அந்த பயன்பாடுகளில் டிஏசிஆ-16 குறியீட்டை மட்டும் ஒரு மாற்றுக் குறியீடாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்காக, அனைத்து அலுவலகங்களுக்குத் தேவைப்படும் உதவிகளை அரசு செய்யும். தற்போது டிஜிட்டல் வடிவத்தில் உள்ள ஆவணங்களும் யூனிகோடு எழுத்துருவுக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் தமிழ் இணைய கண்காட்சி:
மாநாட்டில் சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை நிருபர்களிடம் பேசுகையில்,
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி நடத்தப்பட்ட தமிழ் இணைய கண்காட்சிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழை எவ்வாறெல்லாம் இணையத்தில் பயன்படுத்த முடியும் என்பதை சாதாரண மக்களும் தெரிந்து கொள்ள இந்த கண்காட்சி பெரிதும் உதவியுள்ளது. எனவே இது போன்ற தமிழ் இணைய கண்காட்சியை அனைத்து மாவட்டங்களிலும் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications