போலீஸிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய கார் திருடன் கைது
சென்னை: போலீஸ்காரையே துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய கார் திருடனை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள கார் ஷோரூம் ஒன்றில் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள கார் திருடு போய் விட்டது. இது குறித்து போலீசாரிடம் அந்நிறுவன மேலாளர் இருதயராஜ் புகார் கொடுத்தார்.
வழக்குப்பதிவு செய்த போலீசார் காரை திருடியவர்களை தேடிக் கொண்டிருந்தபோது ஜி.எஸ்.டி. ரோட்டில் அந்த கார் நின்று கொண்டிருந்தது. இதை பார்த்த இன்ஸ்பெக்டர் தினகரன் கார் அருகில் சென்றபோது அதில் இருந்தவன் தப்பி ஓடினான். போலீசார் அவனை விடாமல் துரத்தியபோது துப்பாக்கியை காட்டி மிரட்டினான்.
'எங்களுக்கேவா' என்று டென்ஷனான போலீஸார் படு லாவகமாக செயல்பட்டு அவனை மடக்கிப் பிடித்தனர். அவனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கியில் 6 தோட்டாக்கள் இருந்தது. மேலும், அவன் வைத்திருந்த பையில் ரூ. 93 ஆயிரம் இருந்தது. அவன் மீனம்பாக்கம் கார் ஷோரூமிலிருந்து காரை திருடியதையும் ஒத்துக் கொண்டான்.












Click it and Unblock the Notifications