கே.பி மூலமாக புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் ஆதரவைப் பெற முயற்சி-கோத்தபயா கூறுகிறார்
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேசப் பிரிவு தலைவராக இருந்து வந்த கேபியை பயன்படுத்தி புலம் பெயர்ந்த தமிழர்களின் ஆதரவைப் பெற முயற்சித்து வருவதாக கோத்தபயா ராஜபக்சே கூறியுள்ளார்.
புலிகளின் ஆயுதபேர வர்த்தகத்தை கவனித்து வந்த குமரன் பத்மநாதன், இறுதிகட்ட போரின்போது அந்த அமைப்பின் சர்வதேசப் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டார். ஈழப் போர் முடிந்த பின்னர், கோலாலம்பூரில் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.
பி்ன்னர் இலங்கை கொண்டு வரப்பட்ட அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தது இலங்கை அரசு. இந்த விசாரணையின் விளைவாக கேபி அப்ரூவராக மாறி விட்டார். இப்போது இலங்கையின் பாதுகாப்பில் ராஜபோகமாக அவர் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் கேபியை வைத்து ஒரு புதிய சதுரங்க ஆட்டத்தை ஆட புறப்பட்டுள்ளார் கோத்தபயா. அவர் மூலம் வெளிநாடுவாழ் தமிழர்களின் ஆதரவைப் பெறவும், புலிகளின் வெளிநாட்டு அமைப்புகளை அழிக்கவும் முயற்சித்து வருவதாக கூறியுள்ளார் அவர்.
ராஜபக்சேவின் தம்பியான கோத்தபயா இதுகுறித்துக் கூறுகையில்,
சர்வதேச அளவில் மூன்று அமைப்புகள், விடுதலைப் புலிகள் ஆதரவுப் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன. சர்வதேச தமிழ் கூட்டமைப்பும், ருத்ரகுமார், நெடியவன் ஆகிய இரண்டு தனிநபர்களும் புலிகளின் பிரதிநிதிகளாக இன்னமும் செயல்பட்டு வருகின்றனர்.
புலிகள் விவகாரத்தில் உலகிற்கு உண்மையை எடுத்துரைக்க இலங்கை அரசு கடைமைப்பட்டிருக்கிறது என்றார் அவர்.
இதற்கிடையே கேபியின் அழைப்பின் பேரில் வெளிநாடு வாழ் தமிழர்கள் சிலர் சமீபத்தில் கொழும்பு வந்து சென்றுள்ளனர்.
அவர்களிடம் பேசிய பத்மநாதன், போரினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும், அங்கு புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டியதின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது.
இவர்கள் போய் தத்தமது நாடுகளில் கேபி கூறியதைச் சொல்லி அவர்களை இலங்கை அரசுக்கு ஆதரவாக திருப்புவார்கள் என இலங்கை அரசு எதிர்பார்க்கிறதாம். இதுபோல புலம் பெயர்ந்த தமிழர்களின் ஆதரவை தன் பக்கம் திருப்பி விட்டால் விடுதலைப் புலிகள் மீண்டும் தலையெடுக்க முடியாது என்பது இலங்கை அரசின் எண்ணம்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications