மகளுக்கு அமைச்சர் பதவி கேட்டாரா சரத்பவார்?

இப்போது விவசாயம், உணவு மற்றும் பொது வழங்கல் துறைக்கான கேபினட் அமைச்சராக பவார் உள்ளார். அவரது கட்சியைச் சேர்ந்த பிரபுல் படேல் விமானப் போக்குவரத்துறை இணையமைச்சராக (தனி பொறுப்பு) உள்ளார்.
இந் நிலையில் தன் வசம் உள்ள உணவு மற்றும் பொது வழக்கல் துறையை எடுத்துக் கொள்ளுமாறும், தனது மகள் உள்பட தனது கட்சியைச் சேர்ந்த மேலும் இருவருக்கு மத்திய அமைச்சரவையில் பவார் இடம் கோரியுள்ளதாகவும் கூறப்பட்டது.
ஆனால், இந்தத் தகவல்களை சரத் பவார் மறுத்துள்ளார். மும்பையில் நிருபர்களிடம் பேசிய அவர், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராகிவிட்டதால் எனது சுமையைக் குறைக்கவே பிரதமரிடம் கோரினேன். எனது கட்சிககு மேலும் அமைச்சர் பதவிகளை நான் சோனியாவிடமோ பிரதமரிடமோ கோரவில்லை.
கட்சி அடிமட்டத்தை வலுப்படுத்த எனக்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. மராட்டிய மாநிலத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பல பகுதிகளுக்கு என்னால் செல்ல முடியவில்லை. நான் அந்தப் பகுதிகளுக்கு சென்று மக்களையும், இளைஞர்களையும் சந்தித்து பேசி தேசியவாத காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த விரும்புகிறேன்.
பிரதமரை சந்தித்த போது நான் எனது கட்சிக்கு கூடுதல் அமைச்சர் பதவிகளை கேட்டதாகவும், என் மகள் சுப்ரியாவுக்கு அமைச்சர் பதவி தருமாறு வலியுறுத்தியதாகவும் வெளியான தகவல்களில் எந்த உண்மையும் இல்லை.
அதே போல பிரபுல் படேலுக்கு கேபினட் அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்றும் கேட்கவில்லை.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவியை ஏற்றிருப்பதால் என் அரசியல் பணி பாதிக்கப்படாது. கிரிக்கெட் சங்க பணிக்காக துபாய்க்கு மாதம் ஒரு தடவை சென்று வந்தால் போதுமானது.
மேலும் மகாராஷ்டிர அரசில் எனது தங்கை மகன் அஜித் பவாரை துணை முதல்வராக்க வேண்டும் என்று நான் கோரியதாக வரும் தகவல்களும் தவறு என்றார் பவார்.












Click it and Unblock the Notifications