5 செயற்கைக் கோள்களுடன் ஏவப்பட்டது பிஎஸ்எல்வி!
ஸ்ரீஹரிகோட்டா: 5 செயற்கைக்கோள்களை சுமந்து கொண்டு பிஎஸ்எல்வி-சி15 ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்பட்டது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்ட இந்த ராக்கெட் இந்தியாவின் தொலையுணர்வு செயற்கைக் கோளான கார்டோசாட்-2பி, அல்ஜீரியாவின் அல்சாட், கனடா, சுவிட்சர்லாந்தின் 2 நானோ செயற்கைக் கோள்கள், அந்திர, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தயாரித்த மிகச் சிறிய அளவிலான ஸ்டூட்சாட் ஆகிய செயற்கைக்கோளை சுமந்து கொண்டு வெற்றிகரமாக விண்ணில் பாயந்தது.
மே 9ம் தேதியே இது விண்ணில் செலுத்தப்படவிருந்தது. ஆனால் அப்போது ராக்கெட்டின் 2வது நிலையில் சில பிரச்சனைகள் ஏற்பட்டதால் தள்ளி வைக்கப்பட்டு இன்று ஏவப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் ஜிஎஸ்எல்வி-டி3 ராக்கெட்டை இந்தியா செலுத்தியது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது.அதன் பின்னர் இந்தியாவின் முதல் ராக்கெட் ஏவுதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று விண்ணில் செலுத்தப்படவுள்ள கார்டோசாட்-2பி செயற்கைக் கோளின் எடை 694 கிலோவாகும்.
நகர்ப்புறத் திட்டமிடல், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது ஆகிய பணிகளுக்கான ஆய்வு தொடர்பாக இந்த செயற்கைக்கோள் செலுத்தப்படுகிறது. மேலும், நெடுஞ்சாலைகளைத் திட்டமிடும் பணி, ரிங் ரோடுகள் அமைக்கும் பணி ஆகியவற்றை திட்டமிடவும் இந்த செயற்கைக் கோள் உதவும்.
முன்னதாக ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்படுவதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையத் தலைவர் ராதாகிருஷ்ணன், நேற்று திருப்பதியி்ல் சுவாமி தரிசனம் செய்தார்.












Click it and Unblock the Notifications