For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடையநல்லூரில் கந்துவட்டி கும்பல் அட்டகாசம்: குடும்ப பெண்ணை மிரட்டி ஆபாச படம்

Google Oneindia Tamil News

கடையநல்லூர்: கடையநல்லூரில் கந்து வட்டி பிரச்சனையில் பெண்ணை ஆபாச படம் எடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடையநல்லூர் அட்டைக்குளம் தெருவை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரின் மகன் முகமது மைதீன். இவர் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் டிராவல் ஏஜென்ஸி நடத்தி வருகிறார். இவருக்கு சமீப காலமாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் இவர் பலரிடம் கந்து வட்டிக்கு கடன் வாங்கினார்.

இவரது நண்பர்களான ஆரிபுல்லா, அசன் இப்ராகீம், மைதீன் ஆகிய 3 பேரும் இவருக்கு கடன் கொடுத்து மாதம் மாதம் வட்டி பெற்று வந்துள்ளனர்.

இந்நிலையில் முகமது மைதீ்ன் அடிக்கடி வெளியூர் சென்று வந்ததால் நண்பர்கள் 3 பேரும் அவரது வீட்டிற்கு தினமும் வட்டி வாங்க சென்றுள்ளனர்.

இதில் முகமது மைதீனின் மனைவி அசன் பாத்திமாவுக்கும், இவர்கள் 3 பேருக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. இதனால் இவர்கள் அடிக்கடி மைதீன் வீட்டிற்கு சென்று வந்தனர். பின்னர் அசன் பாத்திமாவை இவர்கள் 3 பேரும் பல ஊர்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

அத்துடன் தங்களுடன் உல்லாசமாக இருந்ததை செல்போனில் படம் எடு்த்து நெருங்கிய நண்பர்களிடம் காட்டியுள்ளனர். நாளடைவில் கந்து வட்டிக்கு ஈடாக அசன் பாத்திமாவை மிரட்டி ஆபாச படம் எடுத்து செல்போனில் எஸ்.எம்.எஸ்சில் அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் 3 பேரில் ஒருவர் மைதீன் வீ்ட்டிற்கு நள்ளிரவில் சென்றபோது அக்கம்பக்கத்தினர் பிடித்து நையபுடைத்தனர். இதற்கிடையே இதுகுறித்து அசன் பாத்திமாவின் கணவர் முகமது மைதீன் கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார்.

அந்த புகாரில் கந்து வட்டி காரணமாக தான் இல்லாத போது 3 பேர் தனது மனைவியை மிரட்டி செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதாக கூறியுள்ளார்.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஆசை தம்பி, இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் விசாரணை நடத்தி 3 பேரையும் கைது செய்து தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X