Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்திய டெலிகாம் நிறுவனங்களுக்கு வங்கிகள் ரூ.1.06 லட்சம் கோடி கடன்

Subscribe to Oneindia Tamil

Telecom
மும்பை: இந்த நிதியாண்டில் முதல் காலாண்டில் இந்திய வங்கிகள் கடன் தொகை ரூ.1.62 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

இதில் பெரும்பாலான கடன் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. 3ஜி அலைவரிசை ஒதுக்கீடு மற்றும் வயர்லெஸ் பிராண்ட்பான்ட் ஒதுக்கீடு ஆகியவற்றைப் பெற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் சென்ற ஜுன் மாதத்தில் மட்டும் வங்கிகளிடமிருந்து ரூ.1.06 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளன.

ஜுலை 1ம் தேதி முதல் அடிப்படை வட்டி விகிதத்திற்குக் கீழ் கடன் வழங்க தடை விதிக்கப்பட்டது. இந்த தினத்துக்குப் பின் வாங்கும் கடனுக்கு வட்டி அதிகம் என்பதால், பல பெரிய நிறுவனங்கள் ஜுலை 1ம் தேதிக்கு முன்னதாகவே அதிக அளவில் வங்கிகளிடமிருந்து கடன் வாங்கின.

இதுவும் இந்திய வங்கிகள் வழங்கிய கடன் தொகை அதிகரிப்புக்கு ஒரு காரணமாகும்.

அதே போல கார்கள், இரு சக்கர வாகனங்கள் வாங்க பொது மக்களுக்கு வங்கிகள் வழங்கிய கடனும் முதல் காலாண்டில் 25 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதே போல வங்கிகள் திரட்டிய டெபாசிட்டும் ரூ.1.46 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

நிறுவனங்கள் செலுத்தும் மொத்த டெபாசிட்டுகளுக்கு அதிக வட்டியை வங்கிகள் அளித்ததால் இந்த டெபாசிட்டுகள் அதிகரித்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+