செக்ஸ் சாமியார் பிரேமானந்தாவுக்கு ஆபரேஷன்-பித்தப் பை கற்கள் அகற்றம்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: இரட்டை ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும் செக்ஸ் சாமியார் பிரேமானந்தாவுக்கு கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பித்தப் பை கற்களை அகற்ற லேப்ராஸ்கோப்பிக் அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டது.

கடந்த 16 வருடங்களாக கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பிரேமானந்தா. அவருக்கு நுரையீரல், சிறுநீரகம், இருதயம் என பல்வேறு கோளாறுகள். கண்ணும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறஅனுமதிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தை அணுகினார் பிரேமானந்தா.

இதுகுறித்து பரிசீலிக்குமாறு சிறைத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து பிரேமானந்தாவுக்கு 30 நாள் பரோல் கொடுத்து சிறைத்துறை எஸ்.பி. ஆனந்தன் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து கடந்த 10ம் தேதி பிரேமானந்தா பரோல் மூலம் விடுவிக்கப்பட்டு கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பித்தப் பை கற்களை ஆபரேஷன் மூலம் அகற்றினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+