For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வங்கிகளின் வாராக் கடன் ரூ.74,685 கோடி!

By Chakra
Google Oneindia Tamil News

Loan
டெல்லி: 2009-10ம் நிதியாண்டில் இந்திய வங்கிகளின் வாராக் கடன் ரூ.74,685 கோடியாக அதிகரித்துள்ளது.

இதில், பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் ரூ.57,301 கோடியாகும். இந்திய வங்கிகளின் வாராக் கடனில் 77 சதவீதம் பொதுத் துறை வங்கிகள் வழங்கியது தான்.

பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் கடந்த 2008-09ம் நிதியாண்டில் ரூ. 44,039 கோடியாக இருந்தது. இது, இப்போது 30 சதவீதம் அதிகரித்து ரூ.57,301 கோடியாக உயர்ந்துள்ளது.

சென்ற நிதியாண்டில் பொதுத் துறை வங்கிகள் வழங்கிய மொத்த கடன் ரூ.25.19 லட்சம் கோடியாகும். இதில் வாராக் கடன் 2.27 சதவீதமாகும்.

அதே போல தனியார் வங்கிகளின் வாராக் கடன் ரூ.17,384 கோடியாகியுள்ளது. இந்த வங்கிகள் வழங்கிய மொத்தக் கடனில் இது 23 சதவீதமாகும்.

2008-09ம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் தனியார் வங்கிகளின் வாராக் கடன் 3 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது.

இந் நிலையில் விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு இந்த ஆண்டு ரூ. 5,050 கோடி வழங்கவுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X