கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தால் உயிர் பெற்ற தாய்-கருணாநிதிக்கு மகள் நன்றிக் கடிதம்
சென்னை: கலைஞர் காப்பீட்டு திட்டத்தால், என்னுடைய அம்மா வெ.சண்முகத்தாய்க்கு சிறுநீரக ஆபரேஷன் செய்து உயிர் பிழைத்துள்ளார். எங்கள் குடும்பத்தைக் காப்பாற்றியதற்கு கலைஞர் தாத்தாவுக்கு மிக்க நன்றி என்று கூறி 8வது வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தான் கலைஞர் தாத்தாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க விரும்புவதாகவும் அந்த சிறுமி கூறியுள்ளார்.
சென்னை புழுதிவாக்கம் மந்தவெளித் தெருவைச் சேர்ந்த அந்த சிறுமியின் பெயர் வெ.வைசாலி. இதுதொடர்பாக முதல்வருக்கு அச்சிறுமி எழுதியுள்ள கடிதத்தில்,
அன்புள்ள முதல்-அமைச்சர் கலைஞர் தாத்தா அவர்களுக்கு வணக்கம்.
கலைஞர் காப்பீட்டு திட்டத்தால், என்னுடைய அம்மா வெ.சண்முகத்தாய்க்கு சிறுநீரக ஆபரேஷன் செய்து உயிர் பிழைத்துள்ளார். எங்கள் குடும்பத்தைக் காப்பாற்றியதற்கு மிக்க நன்றி.
நானும் என் அம்மா, அப்பாவும் உங்களை நேரில் சந்தித்து எங்கள் குடும்பத்தினர் நன்றியைத் தெரிவிக்க கலைஞர் தாத்தா வாய்ப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று பாசத்துடன் குறிப்பிட்டுள்ளார் வைசாலி.