திமுக கூட்டணியை காங். தலைவர்கள் விமர்சிக்கக் கூடாது-தங்கபாலு
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியினர் திமுக கூட்டணியை விமர்சித்துப் பொது இடங்களில் பேசக் கூடாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கோரிக்கை விடுத்துள்ளார்.
தங்கபாலுவைத் தவிர தமிழக காங்கிரஸ் முன்னணித் தலைவர்கள் பலரும் திமுக கூட்டணியை பகிரங்கமாகவும், மறைமுகமாகவும் விமர்சித்தபடி உள்ளனர். அதிலும் ஈவிகேஎஸ் இளங்கோவன், கார்த்தி சிதம்பரம் போன்றோர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
நேற்று கூட இளங்கோவன் இதுகுறித்து பேசினார். சத்தியமூர்த்தி பவனில் நடந்த செல்வப் பெருந்தகை காங்கிரஸில் இணையும் நிகழ்ச்சியின்போது அவர் பேசுகையில், தொண்டர்களின் மனதை இங்கு மூத்த தலைவர்கள் பார்த்துள்ளனர். இந்த மனதுக்கேற்ற கூட்டணியைக் கொண்டு வர வேண்டும் என கட்சித் தலைமைக்கு அவர்கள் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றார் இளங்கோவன்.
இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியை வெளிப்படையாக இளங்கோவன் விமர்சித்து வருகிறாரே. அதிமுகவுடன் கூட்டணி வருமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, இப்போது திமுகவுடன் கூட்டணி சுமூகமாகவே உள்ளது. இது மேலிடம் ஏற்படுத்திய கூட்டணி. இதை குலைக்க வேண்டிய அவசியம் இல்லை. இதில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை.
தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி என்பது அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி எடுத்த முடிவு. இதில் எந்த மாற்றமுமில்லை. அவரது கட்டளையை நிறைவேற்ற வேண்டிய கடமை தமிழக காங்கிரசுக்கு உண்டு.
கூட்டணி பற்றி சோனியா காந்தி சார்பில் தமிழகத்தில் நான் மட்டுமே பேச முடியும். வேறு யாரும் பேச முடியாது. பேசக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். உள் அரங்குகளில், செயற்குழு, பொதுக் குழு கூட்டங்களில் தான் தங்கள் கருத்துக்களை பேச வேண்டும். அதை பொது மேடைகளில் பேசக் கூடாது என்றார்.












Click it and Unblock the Notifications