For Daily Alerts
Just In
வருமான வரி கணக்கு சமர்ப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு!
டெல்லி: வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய காலக் கெடுவை நீட்டித்துள்ளது மத்திய வருவாய் வரி வாரியம்.
இதன்படி ஜூலை 31யிலிருந்து ஆகஸ்ட் 4-ம் வரை கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வருமான வரித்துறை விடுத்து அறிக்கையில், "வருமான வரி செலுத்துவோர் தங்கள் வருமானம், முதலீடு தொடர்பான அனைத்து கணக்குகளையும் வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி புதன் கிழமை மாலைக்குள் அந்தந்த வருமான வரி அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.
இணையதளம் மூலம் இ-ஃபைலிங் செய்வோர் சில தொழில்நுட்ப பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக புகார்கள் எழுந்ததாலும், வரிமான வரு கணக்கு சமர்ப்பிக்க இறுதி நாளில் ஏராளமான கூட்டம் முண்டியடித்ததாலும் இந்த காலக்கெடு நீட்டிப்பு முடிவை மேற்கொண்டதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments
Story first published: Monday, August 2, 2010, 12:26 [IST]