பூவரசி ஜாமீன் மனு-விசாரணைக்கு வராத வக்கீல்கள்-ஒத்திவைப்பு
சென்னை : சிறுவன் ஆதித்யா கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளம் பெண் பூவரசியின் ஜாமீன் மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால் வக்கீல்கள் யாரும் ஆஜராகாததால் விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தனது கள்ளக்காதலர் மீதான கோபத்தால், அவரது ஒன்றரை வயது மகன் ஆதித்யாவைக் கொடூரமாக கொலை செய்ததாக கைது செய்யப்பட்டவர் பூவரசி. புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜாமீன் கோரி ஜார்ஜ்டவுன் கோர்ட், சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட் ஆகியவற்றில் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடியாகி விட்டன. இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதி பாஸ்கர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பூவரசி வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து 2 வாரங்களுக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.