காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே விபத்து-2 ராணுவத்தினர் பலி
Subscribe to Oneindia Tamil
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே நடந்த விபத்தில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர்.
கமோவ் ரெஜிமென்ட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் சிலர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு முகாமுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பகீர் படா என்ற இடத்தில் திடீரென அவர்கள் வந்த வாகனம் கவிழ்ந்து விழுந்தது. விழுந்த வேகத்தில் அருகில் இருந்த பள்ளத்தில் வாகனம் உருண்டது.
இதில் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஜவான்கள் புஷ்கர் சிங், நவீன் குமார் ஆகியோர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications