For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பேச்சுவார்த்தைக்கு நக்ஸல்கள் தயார்: மம்தாவை மத்தியஸ்தராக ஏற்பதாக அறிவிப்பு

By Chakra
Google Oneindia Tamil News

Mamata Banerjee and Manmohan Singh
கொல்கத்தா: மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்க வசதியாக 3 மாத காலம் தாக்குதல்களை நிறுத்தத் தயாராக இருப்பதாக நக்ஸல் அமைப்பின் முக்கியத் தலைவரான கிஷன்ஜி அறிவித்துள்ளார்.

அதே போல மத்தியப் படைகளும் போலீசாரும் தங்களது தேடுதல் வேட்டையையும் தாக்குதல்களையும் நிறுத்த வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளார்.

இரு தரப்புக்கும் இடையே மத்தியஸ்தராக ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியை பிரதமர் நியமித்தாலும் அதை ஏற்கவும் தயாராக இருப்பதாகவும் கிஷன்ஜி கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், ஆயுதத் தாக்குதல்களை நிறுத்துமாறு தங்களது சுதந்திர தின உரையில் ஜனாதிபதியும் பிரதமரும் எங்களுக்கு கோரிக்கை விடுத்தனர். நாங்களாக ஆயுதம் தூக்கவில்லை. மத்திய-மாநில அரசுகளின் செயல்கள் தான் எங்களை ஆயுதம் ஏந்த வைத்தன.

எங்களது தலைவர்களில் ஒருவரான ஆஸாத், அரசுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாரானபோது அவரை கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் சுட்டுக் கொன்றனர். இதனால் மத்திய அரசு அமைதியை விரும்பவில்லை என்பது தெளிவாகிறது.

இதனால் மத்திய அரசு தனது தாக்குதல்களை நிறுத்துவிட்டு பேச்சுவார்த்தைக்கான சூழ்நிலையை உருவாக்காதவரை நாங்கள் தாக்குதலை நிறுத்த மாட்டோம் என்பதையும் தெளிவாக்குகிறேன்.

மேலும் எங்களது இயக்கத்தினர் பரவியுள்ள பகுதிகளில் இருந்து கூட்டுப் படைகளை பிரதமர் வாபஸ் பெறாத வரை, ஆஸாத்தின் கொலை குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடாத வரை பேச்சுவார்ததை சாத்தியமே இல்லை.

எங்களை ஒழிப்பதற்காக போலீசாருக்கு நவீன ஆயுதங்களைத் தருவதற்காக ரூ. 8,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. எங்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக தினந்தோறும் சராசரியாக ரூ. 60 லட்சம் செலவிடப்படுகிறது.

இதை நாட்டின் பிற்பட்ட மாவட்டங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இளைஞர்களுக்கு நல்வாழ்வு அளிக்கும் திட்டங்களுக்கும் பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளார் கிஷன்ஜி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X