திமுக-காங். கூட்டணி வலுவாகவே உள்ளது-இளங்கோவன் தடாலடி பல்டி

திமுக மீது தொடர்ந்து சரமாரியாக பாய்ந்து வந்த இளங்கோவனை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காங்கிரஸ் மேலிடம் சமீபத்தில் வாய்ப்பூட்டு போட்டது - குலாம் நபி ஆசாத் மூலமாக.
இதையடுத்து இளங்கோவன் அடக்கி வாசிக்க ஆரம்பித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. டி.எஸ்.விஜயகுமாரின் மகளின் திருமணத்திற்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்கள் அவரைச் சூழ்ந்தனர். அவர்களிடம் இளங்கோவன் பேசுகையில், திமுக-காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது. கூட்டணி பற்றி கருத்து தெரிவிப்பது என்றால், நாங்கள் குலாம் நபி ஆசாத்திடம் தெரிவிப்போம். அவர், அதை தலைமையிடம் தெரிவிப்பார். இதுவே எங்கள் கட்சியின் நிலைப்பாடு என்று மொட்டையாக சொல்லி நிறுத்திக் கொண்டார்.
அதேசமயம், தனது டச்சையும் இளங்கோவன் விடவில்லை. அவர் கூறுகையில், மத்திய அரசின் திட்டங்கள் எவை எவை என்பது மக்களிடம் சரியாகப் போய்ச் சேரவில்லை. அதனால் ஒன்றாம் தேதி முதல் முப்பதாம் தேதி வரை காங்கிரஸில் மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் நடக்கும் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு விளக்கப் போகிறார்கள்.
மத்திய அரசு செயல்படுத்தும் 100நாள் வேலை திட்டத்தில் ஒரு நபருக்கு ஒரு நாள் கூலியாக 100 வழங்குகிறது. ஆனால் தமிழகத்தில் பல ஊராட்சி மன்றத்தலைவர்கள் 60 ரூபாய் 80ரூபாய் தந்து மக்களை ஏமாற்றுகிறார்கள்.
இதனை முதல்வர் கருணாநிதி அரசு தடுக்க வேண்டும். உண்மையான கூலியை வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுகவை லேசாக இடித்துக் கருத்துக் கூறி நிறுத்தினார்.












Click it and Unblock the Notifications