கருணாநிதியி்ன் கோபாலபுரம் வீட்டில் கட்ட விதிமீறல்: ஜெயலலிதா

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
1967ம் ஆண்டு தமிழக பொதுப்பணித் துறை அமைச்சராக பதவியேற்ற பிறகு, கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு பின்புறம் இருந்த சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 780 சதுர அடி நிலத்தை தன் வீட்டுடன் கருணாநிதி இணைத்துக் கொண்டார்.
சென்னை மாநகராட்சி விதிமுறைகளின்படி, 10,000 சதுர அடிக்கு மேலான கட்டடம் கட்டப்படும் போது, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குறிப்பிட்ட காலி இடத்தை மாநகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், திமுக தலைமையிடமான அண்ணா அறிவாலயம் கட்டப்படும்போது, மாநகராட்சி விதிமுறைப்படி காலியிடம் மாநகராட்சியிடம் வழங்கப்படவில்லை.
இதே போன்று, முரசொலி நாளிதழ் அமைந்துள்ள கட்டிடம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
காலாவதி மற்றும் போலி மருந்து விற்பனையில் தொடர்புடையவர்களை கைது செய்ய ஒருபுறம் நடவடிக்கை எடுத்துவிட்டு, மறுபுறம் திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞரை குற்றவாளிகளுக்கு ஆதரவாக நியமித்து ஜாமீன் வாங்கவும் நடவடிக்கை எடுக்கிறார் கருணாநிதி.
இவற்றையெல்லாம் கண்டித்து வடசென்னை மாவட்ட அதிமுக சார்பில் நாளை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications