அன்னை தெரசா சிறப்பு நாணயம் வெளியீடு!

உலக சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசாவின் நூற்றாண்டு விழா நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, அவரது வாழ்க்கை வரலாறு, சேவைகள், மக்களுக்கு அவர் விடுத்த தகவல்கள் ஆகியவற்றை விளக்கி சிறப்பு கண்காட்சி ரெயில் ஒன்று நாடு முழுவதும் புறப்படுகிறது.
6 மாத காலம் நாட்டை வலம் வர இருக்கும் இந்த ரெயிலை, அன்னை வாழ்ந்த இடமான கொல்கத்தாவில் மத்திய ரெயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில், "அன்னை தெரசா வெளிநாட்டில் பிறந்தவராக இருந்தாலும், ஏழைகள், பெற்றோர் மற்றும் உறவினர்களை இழந்த ஆதரவற்றவர்கள், கணவர்கள் மற்றும் பெற்றோரால் கைவிடப்பட்டவர்கள், சமுதாயத்தின் அடித்தட்டு மக்கள் ஆகியோரை ஆதரித்து, அவர்களுக்காகவே சவைகள் செய்து வாழ்ந்தவர். தனது சேவை மூலம் இந்திய மக்களின் இதயங்களை வென்றவர்.
அன்பு என்றால் அன்னை தெரசா என்று உலகம் முழுவதும் புகழ் பெற்று, அன்பின் சின்னமாக திகழ்ந்த தாய் அவர்.
அவர் தனது புகழ் மிக்க சேவைகளை நமது கொல்கத்தாவில் இருந்து தொடங்கினார் என்பது நமக்கெல்லாம் பெருமை.
அவரது நூற்றாண்டு விழாவை குறிக்கும் வகையில் மத்திய அரசு அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தை விரைவில் வெளியிடும். அன்னை தெரசா நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து பிரதமர் மன்மோகன்சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி, சபாநாயகர் மீராகுமார் ஆகியோருடன் பேசியுள்ளேன்..." என்றார்.
சோனியா சிறப்பு செய்தி:
ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு செய்தி ஒன்றை அனுப்பி இருந்தார். அதில், "அன்னை தெரசாவின் புகழை இந்த கண்காட்சி சிறப்பு ரெயில் நாடு முழுவதும் எடுத்துச் செல்லும்'' என்று தெரிவித்திருந்தார்.
அன்னை தெரசா நிறுவிய 'மிஷனரி ஆப் சேரிட்டி' அமைப்பின் தலைவர் சகோதரி பிரேமா, சகோதரிகள் நிர்மலா, ஆன்சி, ஜோசப், ஜெரார்டு ஆகியோரும் நிகழ்ச்சியில் பேசினார்கள்.
மத்திய மாநில அமைச்சர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications