For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தென்காசி மாணவர் தற்கொலை: கல்லூரி நிர்வாகம் மீது மாணவர்கள் புகார்

Google Oneindia Tamil News

பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அக்கல்லூரி முன் மாணவர்கள் குவிந்ததால் பதற்றம் ஏற்பட்டது.

தென்காசியை அடுத்த பாவூர்சத்திரத்தில் எம்.எஸ்.பி.வி.எல். பாலிடெக்னிக் காலேஜ் இயங்கி வருகிறது. அதில் சிவகாமிபுரத்தைச் சேர்ந்த சிதம்பரசேட் என்பவரின் மகன் அரவிந்த் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

சுமாராக படிக்கும் அரவிந்தை கடந்த வெள்ளிக்கிழமை அன்று துறைத் தலைவர் கடுமையாக திட்டியுள்ளார். இதனால் 2 நாளாக கல்லூரிக்குச் செல்லாத அரவிந்த் நேற்று இரவு தூங்கும் போது விஷம் குடித்து விட்டு தூங்கி விட்டார். மறுநாள் காலை வெகு நேரமாகியும் எழுந்திராத அவர் இறந்ததை அறிந்த கல்லூரி மாணவர்கள் பெரும் திரளாக கல்லூரி முன்பு கூடிவிட்டனர்.

தகவல் அறிந்த கல்லூரி நிர்வாகம் கல்லூரிக்கு விடுமுறை அறிவித்துவிட்டது என்று மாணவர்கள் குற்றம் சாட்டினர். மேலும், அவர்கள் தாங்களு்ம் கல்லூரி ஆசிரியர்களால் நிறைய துன்பங்கள் அனுபவிப்பதாகவும், அடக்கு முறையை கல்லூரி நிர்வாகம் கைவிடாவிட்டால் அரவிந்த் எடுத்த முடிவை தான் மற்ற மாணவர்களும் எடுக்க நேரிடும் என எச்சரித்தனர்.

ஆனால் அரவிந்தின் பெற்றோரும், கல்லூரி நிர்வாகமும் அரவிந்த் உடல் நல உலைச்சலால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறுகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X