விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடரும்: தமிழக அரசு
சென்னை: விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் தொடரும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் கருணாநிதி 15.08.2010 அன்று நிகழ்த்திய சுதந்திர தின உரையில் தமிழகம் முழுவதிலும் பயன்படுத்தப்பட்டு வரும் பல விவசாய பம்பு செட்டுகள், திறன் குறைந்தவையாக இருப்பதால், மின்சாரம் அதிகம் செலவாகிறது என்றும்,
இத்தகைய பம்பு செட்டுகளுக்கு பதில், திறன்மிக்க புதிய பம்பு செட்டுகளைப் பொருத்துவதன் மூலம், 20 சதவீதம் அளவுக்கு மின்சாரத்தைச் சேமித்திட முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.
எனவே சிறு, குறு விவசாயிகளின் பம்பு செட்டுகளில் உள்ள பழைய மின் மோட்டார்களை நீக்கிவிட்டு, அவற்றிற்குப் பதிலாக, புதிய மின் மோட்டார்கள் அரசின் சார்பாக இலவசமாகப் பொருத்தித் தரப்படும் எனவும், மற்ற விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்துடன், புதிய மோட்டார்கள் பொருத்தித் தரப்படும் எனவும் அவர் அறிவித்தார்.
இந்தத் திட்டத்தின் நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் ஒருசிலர் தவறான கருத்துக்களை வெளியிட்டு இத்திட்டத்தின் நோக்கத்தை திசை திருப்ப முயல்கின்றனர்.
தற்போது புதிதாகப் பொருத்தப்படவுள்ள அதிக திறன் கொண்ட மின் மோட்டார்களில் மீட்டர் பொருத்தப்படுவது மின் கட்டணம் வசூலிப்பதற்காகவே என்று அவதூறு பரப்புவது, விவசாயிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தை முடக்கிப் போடச் செய்யும் முயற்சியாகும்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதால் விவசாயிகள் இதுகுறித்து எந்த அச்சமும் அடையத் தேவையில்லை.
இத் திட்டத்தின்கீழ் புதிய மின் மோட்டார்கள் பொருத்திக் கொள்ள விருப்பம் தெரிவிக்கின்ற விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின் மோட்டார்கள் பொருத்தித் தரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
-
ரேசன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! வீடு தேடி வரும் ரேசன் பொருள்! இந்த மாதம் எப்போது வரும்? -
முதலாளியாக சூப்பர் சான்ஸ்.. 1.50 கோடி வரை மானியம்! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு! எப்படி பெறுவது? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications