பாளை சிறைக்குள் கைதி அடித்து கொலை-பிரேத பரிசோதனையில் அம்பலம்
நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதி கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் அம்பலமாகியுள்ளது.
பாளை மத்திய சிறையி்ல் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையைச் சேர்ந்த கைதி ஒருவரின் செல் காணாமல் போனது தொடர்பாக இரு தரப்பு கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. வல்லநாட்டைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரை சில கைதிகள் தாக்கியதில் அவர் இறந்தார்.
இது குறித்து சிறைத் துறை அதிகாரி கூறும்போது சுப்பிரமணியன் இருதய நோயால் இறந்தார் என்று கூறினார்.
ஆனால் சுப்பிரமணியன் அடித்துக் கொல்லப்பட்டதாகவும், அவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேவர் பேரவை அமைப்பின் தலைவர் மணி தலைமையில் அவரது உறவினர்கள் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.
இந்நிலையில் நெல்லை நீதிபதி ராஜேந்திர கண்ணன் நேற்று முன்தினம் சிறையில் உள்ள கைதிகள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். இந்த விசாரணை சுமார் 4 மணி நேரம் நடந்தது.
மேலும் சிறைத்துறை டி.ஐ.ஜி. கோவிந்தராஜ் நேற்று முன்தினம் மாலை பாளையங்கோட்டைச் சிறைக்கு வந்து விசாரணை நடத்தினார். நேற்றும் விசாரணை தொடர்ந்தது.
இதற்கிடையில் சுப்பிரமணியன் உடல் நெல்லை அரசு மருத்துவமனையி்ல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவரது மார்பு, இடுப்பு, மர்ம உறுப்பு ஆகிய பகுதிகளில் காயம் இருந்தது தெரிய வந்தது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதியானது.
இதையடுத்து அவரை தாக்கிய கைதிகள் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications