அண்ணா பெயரைச் சொல்லி பலரும் ஏமாற்றுகிறார்கள்-அழகிரி
மதுரை: அண்ணா பெயரைச் சொல்லவே தகுதி இல்லாத பலர், அவரது பெயரைச் சொல்லி ஏமாற்றுகிறார்கள் என்று கூறியுள்ளார் மத்திய ரசாயணத்துறை அமைச்சர் மு.க.அழகிரி.
மதுரை மாநகராட்சி திமுக கவுன்சிலர் காரா.முருகேசன் இல்ல திருமண விழா மதுரையில் நடந்தது. அதில் கலந்து கொண்ட அழகிரி பேசுகையில்,
அண்ணா காலத்தில் இருந்தே காரா. முருகேசன் திமுகவில் உள்ளார். காரா. முருகேசனுக்கு தெரியும் அண்ணா பெயரை யார் பயன்படுத்த வேண்டும் என்று. அண்ணா பெயரைச் சொல்ல திமுகவினருக்கு மட்டுமே உரிமை உள்ளது. ஆனால் இப்போது யார் யாரோ அண்ணா பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள்.
அண்ணா ஏற்றுக்கொண்ட ஒரே கட்சி திமுகதான். அண்ணா வழங்கிய சின்னம்தான் உதயசூரியன். அண்ணாவுக்குப் பின்னர் திமுகவை உரிய முறையில், கலைஞர் வழிநடத்தி செல்கிறார். கலைஞர் ஆட்சியில் நாம் பணிபுரிய கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
அண்ணா பெயரை பயன்படுத்தி இன்று பலர் போலி அரசியல் நடத்துகின்றனர். அவர்கள் யார் என்று மக்கள் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களுக்கு மக்கள் உரிய நேரத்தில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார் அழகிரி.












Click it and Unblock the Notifications