For Daily Alerts
Just In
டெல்லியில் அலுவலகம் கட்ட அதிமுகவுக்கு மத்திய அரசு நிலம்
டெல்லி: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு டெல்லியில் அலுவலகம் கட்ட நிலம் ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்தது.
இதன்படி தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக, இடதுசாரி கட்சிகள், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு டெல்லி ஆந்திரபவன் அருகே மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மாநில அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும் நிலம் ஒதுக்கப்படுகிறது. இதன்படி டெல்லியில் அதிமுகவுக்கு தெற்கு டெல்லியில் புஷ்ப விகார் பகுதியில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும்.
2 கிரவுண்டுக்கும் அதிகமான இந்த இடத்துக்கான பத்திரத்தை அதிமுக எம்.பி. தம்பித்துரை பெற்றுக்கொண்டார்.
இங்கு ஒரு ஆண்டுக்குள் அதிமுகவுக்கு பிரம்மாண்டமாக அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
Comments
Story first published: Thursday, September 16, 2010, 15:42 [IST]