பெங்களூர் சாலையில் வேகத்தடை அமைக்க கோரி கல்லூரி மாணவர்கள் மறியல்
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை: பெங்களூர் நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்கக் கோரி கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை - பெங்களூர் சாலையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவர்கள் படித்து வருகின்றனர்.
பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வழக்கத்திற்கு அதிகமான போக்குவரத்து உள்ளது. கல்லூரி அமைந்திருக்கும் பகுதியில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் அதி வேகமாகச் செல்கின்றன. இதனால் அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
இதனை தடுக்கும் வகையில் கல்லூரி அமைந்துள்ள பகுதியின் முன்பு வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கோரி மாணவர்கள் இன்று வகுப்புகளைப் புறக்கணித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர்.












Click it and Unblock the Notifications