தியாகியை அவமதித்த மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்
கடலூர் : பென்ஷன் கேட்டு விண்ணப்பித்த தியாகி ஒருவரை அலையவிட்ட மத்திய மாநில அரசுகளு்ககு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்தவர் ஆர்.கண்ணன். இவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
கடந்த 1942-ம் ஆண்டு இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நான் கலந்து கொண்டு சிறை சென்றேன். இதனால், தியாகி பென்ஷன் கேட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு விண்ணப்பித்தேன். மேலும், அதற்கான முழு ஆதாரங்களையும் உரிய வகையில் அளித்துள்ளேன்.
ஆனால், போதிய ஆதாரம் இல்லை என்று கூறி எனது கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் நிராகரித்து விட்டன. இது தவறான செயலாகும். எனவே, எனக்கு பென்ஷன் வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி தமிழ்வாணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர் தனது உத்தரவில் கூறியிருப்பதாவது,
மனுதாரருக்கு தியாகி பென்ஷன் வழங்க மறுப்பது தவறான செயலாகும். நாட்டிற்காக போராடிய அவரை இந்த வயதான காலத்தில் அலையவிட்டது கொடுமையானது. எனவே மனுதாரருக்கு 8 வாரத்திற்குள் மத்திய, மாநில அரசுகள் தியாகி பென்ஷன் வழங்க வேண்டும். அவர் மனு கொடுத்த 2003-ம் ஆண்டிலிருந்து கணக்கிட்டு 12 சதவிகித வட்டியுடன் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications