சுடுகாடாய் காட்சியளிக்கும் இறுதிப் போர் நடந்த முள்ளிவாய்க்கால்

இறுதிப் போர் நடந்த இந்தப் பகுதி முழுக்க மயான பூமியாய் காட்சியளித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த வருடம் ஏப்ரல்,மே மாதங்களில் இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால், நந்திக்கடல், வலைஞர் மடம், வட்டுவாகல் பகுதிகளுக்கு நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவரும் மற்றும் உறுப்பினர்களும் நேற்று முன்தினம் மாலை சென்று பார்வையிட்டுள்ளனர்.
கோரமான யுத்தம் நடைபெற்ற அந்தப் பகுதிகள் எங்கும் மயான பூமியாகக் காட்சியளித்தது என்றும் போர் எச்சங்களும் பல்வேறு வகையான வாகனங்கள், பொதுமக்களின் உடைமைகள் போன்றவை சேதமடைந்த எரிந்த நிலையில் சிதறிக் காணப்பட்டன என்றும் ஆணைக் குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக நந்திக் கடல் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு படைத் தரப்பில் எந்தவித விளக்கமோ அல்லது வேறு விதமான தகவல்கள் எதுவுமே தெரிவிக்கப்படவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
கடந்த வருடம் மே மாதத்தில் இறுதி மோதல் நடைபெற்ற பகுதி ஒரு குறுகிய நிலப்பரப்பில் மக்கள் சிக்குண்டு கொடுமைகளுக்கும் சித்திரவதைகளுக்கு ஆளாகி இருப்பர் என்பதை தம்மால் உணரமுடிகிறது என்று ஆணைக்குழுவைச் சேர்ந்த ஒருவர் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications