இளம் இந்தியர்கள் அமைதியை நிலைநாட்டுவர்-ப.சிதம்பரம்

டெல்லியில் நிருபர்களிடம் பேசிய அவர், அயோத்தி விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை நாடு முதிர்ச்சியோடு ஏற்றுக் கொள்ளும் என்று நம்புகிறேன்.
அதே நேரத்தில் அமைதியைக் கெடுக்க முனைவோரை ஒடுக்க முழு அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கை முழுமையாக பேணிக் காக்குமாறு அனைத்து மாநில அரசுகளும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு அனைத்துத் தரப்பினரும் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அமைதியை பேணுமாறு அனைத்து மத, அரசியல் அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன. மேலும் மதத் துவேசம் இல்லாத இளம் இந்தியர்கள் அமைதியை நிலைநாட்ட உதவுவார்கள் என்று நம்புகிறேன்.
இந்தியா நெடுந்தூரம் பயணித்துவிட்டது. 1992ம் ஆண்டுக்குப் பின் பிறந்த இந்தியர்களிடம், உலகம் குறித்த வேறு பார்வை உள்ளது. அயோத்தி பிரச்சனைக்கு அப்பாலும் இந்தியாவும் இந்தியர்களும் பயணிக்க வேண்டிய வெற்றிப் பாதையை அவர்கள் சிறப்பாகவே உணர்ந்துள்ளனர்.
அயோத்தி விஷயத்தில் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்போம் என்றே பெரும்பாலான இந்தியர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 1990களில் இருந்த நிலைமையோடு ஒப்பிடுகையில் இது மாபெரும் மாற்றம். இதனால் பெரிய அளவில் பிரச்சனைகள் வராது.
சட்டச்சை மதிப்போம், நீதிமன்ற உத்தரவை ஏற்போம் என்று பாஜக அறிவித்துள்ளது. பாஜக ஆளும் மாநில அரசுகளும் இதே நிலையை எடு்தது, சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற வேண்டும்.
பல்க் எஸ்எம்எஸ், எம்எம்எஸ் மீதான தடை அடுத்த உத்தரவு வரும் வரை தொடரும் என்றார் சிதம்பரம்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications