சென்னை சிறுவன் கொலை: குற்றப்பத்திரிக்கையை வாங்க மறுத்த பூவரசி

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயக்குமாரின் காதலி பூவரசி. ஆனால் அவர் பூவரசியை மணக்காமல் வெறும் உடல் ஆசைக்கு மட்டும் அவரை பயன்படுத்திக் கொண்டார். தே சமயம், பூவரசியோடு சேர்த்து காதலித்த ஆனந்தலட்சுமியை கல்யாணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளையும் பெற்றுக் கொண்டார்.
ஆனந்தி மூலம் ஜெயக்குமாருக்கு நிவேதிதா, ஆதித்யா (மூன்றரை) என இரு குழந்தைகள். இதில் ஆதித்யாவைத்தான் பூவரசி கொலை செய்து கைதாகியுள்ளார்.
ஜெயக்குமார் மூலம், பூவரசி இரண்டு முறை கர்ப்பமாகியுள்ளார். ஆனால் வலுக்கட்டாயமாக அதைக் கலைத்துள்ளார் ஜெயக்குமார். தன்னை உடல் ரீதியாக மட்டுமே ஜெயக்குமார் நேசித்து வந்ததால், விரக்தி அடைந்துதான் கொலை என்ற படு பாதகத்திற்குத் துணிந்து விட்டார் பூவரசி.
அதேசமயம், ஜெயக்குமார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காதலித்த பாவத்திற்காக ஜெயக்குமார் மீது பூவரசி எந்தப் புகாரையும் தரவில்லை.
ஜெயக்குமாரின் மகன் ஆத்தியாவை கடத்தி கொலை செய்து உடலை ஒரு சூட்கேசில் வைத்து நாகப்பட்டிணம் செல்லும் பேருந்தில் போட்டுவிட்டார் பூவரசி.
பின்னர் போலீசார் விசாரணை நடத்தியதில் பூவரசி சிக்கினார். இதையடுத்து அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கடந்த 8-ம் தேதி பூவரசி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இது தன் மீது சமத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டு என்று கூறி 81 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை வாங்க மறுத்துவிட்டார். மேலும், தான் நீதிபதியுடன் தனியாக பேச வேண்டும் என்றும் கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கை மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு மாற்றுவதாகவும், வரும் 27-ம் தேதி அங்கு ஆஜராகி பூவரசி தன் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்றும் நீதிபதி சாந்தி கூறினார். இறுதியாக பூவரசி குற்றப்பத்திரிக்கையை பெற்றுக்கொண்டார்.
-
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது? -
எத்தனை வருட சோகம்.. எவ்வளவு டிரைவர்கள் ஏக்கம்.. முடிவிற்கு வரும் தொப்பூர் கணவாய் கொடூரம்.. எப்படி? -
ரூ.1 லட்சம் கோடி இழப்பை சந்தித்த அம்பானி குடும்பம்.. பங்குச் சந்தையில் என்ன நடந்தது? -
2005ல் பல்லாவரம் ரேடியல் சாலையில் 10 லட்சத்திற்கு இடம் வாங்கியிருந்தால் இன்று என்ன விலை தெரியுமா? -
பலரின் வேட்புமனு நிராகரிக்கப்படலாம்.. போச்சு விஜய் தவெகவிற்கு இருக்கும்... பெரிய சிக்கலே இதுதான்! -
நேரம் பார்த்து அடிக்கும் சவுதி அரேபியா.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அச்சம்? -
அரசு பேருந்தில்.. வழித்தட டிஸ்ப்ளேவில் 'தவெக' என ஓடியதால் ஷாக்! போக்குவரத்துக் கழகம் விளக்கம்












Click it and Unblock the Notifications