சென்னை சிறுவன் கொலை: குற்றப்பத்திரிக்கையை வாங்க மறுத்த பூவரசி

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயக்குமாரின் காதலி பூவரசி. ஆனால் அவர் பூவரசியை மணக்காமல் வெறும் உடல் ஆசைக்கு மட்டும் அவரை பயன்படுத்திக் கொண்டார். தே சமயம், பூவரசியோடு சேர்த்து காதலித்த ஆனந்தலட்சுமியை கல்யாணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளையும் பெற்றுக் கொண்டார்.
ஆனந்தி மூலம் ஜெயக்குமாருக்கு நிவேதிதா, ஆதித்யா (மூன்றரை) என இரு குழந்தைகள். இதில் ஆதித்யாவைத்தான் பூவரசி கொலை செய்து கைதாகியுள்ளார்.
ஜெயக்குமார் மூலம், பூவரசி இரண்டு முறை கர்ப்பமாகியுள்ளார். ஆனால் வலுக்கட்டாயமாக அதைக் கலைத்துள்ளார் ஜெயக்குமார். தன்னை உடல் ரீதியாக மட்டுமே ஜெயக்குமார் நேசித்து வந்ததால், விரக்தி அடைந்துதான் கொலை என்ற படு பாதகத்திற்குத் துணிந்து விட்டார் பூவரசி.
அதேசமயம், ஜெயக்குமார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காதலித்த பாவத்திற்காக ஜெயக்குமார் மீது பூவரசி எந்தப் புகாரையும் தரவில்லை.
ஜெயக்குமாரின் மகன் ஆத்தியாவை கடத்தி கொலை செய்து உடலை ஒரு சூட்கேசில் வைத்து நாகப்பட்டிணம் செல்லும் பேருந்தில் போட்டுவிட்டார் பூவரசி.
பின்னர் போலீசார் விசாரணை நடத்தியதில் பூவரசி சிக்கினார். இதையடுத்து அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கடந்த 8-ம் தேதி பூவரசி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இது தன் மீது சமத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டு என்று கூறி 81 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை வாங்க மறுத்துவிட்டார். மேலும், தான் நீதிபதியுடன் தனியாக பேச வேண்டும் என்றும் கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கை மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு மாற்றுவதாகவும், வரும் 27-ம் தேதி அங்கு ஆஜராகி பூவரசி தன் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்றும் நீதிபதி சாந்தி கூறினார். இறுதியாக பூவரசி குற்றப்பத்திரிக்கையை பெற்றுக்கொண்டார்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications