சிலி சுரங்கத்தில் சிக்கிய 33 பேரும் 68 நாட்களுக்குப் பிறகு பத்திரமாக மீ்ட்பு
சான் ஜோஸ் (சிலி): சில நாட்டின் சான் ஜோஸ் நகர சுரங்கத்திற்குள் சிக்கித் தவித்த 33 பேரும் 68 நாள் போராட்டத்திற்குப் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
உலகிலேயே அதிக நாட்கள் சுரங்கத்திற்குள் சிக்கித் தவித்தவர்கள் இவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
33 பேரில் கடைசி நபராக அந்தத் தொழிலாளர்கள் குழுவின் தலைவர்தான் கடைசியாக வெளியில்வந்தார். அவரது பெயர் லூயிஸ் அல்பர்டோ உர்சுவா. இவர்தான் 32 பேரையும் ஆறுதல்படுத்தி ஆறுதல் கூறியபடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளியில் வந்த அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் அதைக் கொண்டாடினர். தங்களது குடும்ப உறுப்பினர்களை கட்டிப்பிடித்துக் கொண்டு சிலி நாட்டுக் கொடியை அசைத்தபடி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
புதன்கிழமையுடன் இந்த மீட்புப் பணிகள் வெற்றிகரமாக முடிந்தன.
கிட்டத்தட்ட 2000 அடி ஆழ மலைப் பள்ளத்திற்குள் இவர்கள் அனைவரும்சிக்கிக் கொண்டனர். இவர்களை பத்திரமாக மீட்க பல்வேறு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. இறுதி நடவடிக்கை சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. நேற்றுடன் அது முடிவடைந்தது.
கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி இவர்கள் அனைவரும் சுரங்கத்தின் அடிப் பகுதிக்குப் போயிருந்தபோது திடீரென மலைப் பாறைகள் சறுக்கி சுரங்கத்தை மூடி விட்டது என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications