தமிழக சட்டசபை உறுப்பினர்களுக்கு இமெயில் ஒதுக்கீடு-முதல்வர் தொடங்கி வைத்தார்
சென்னை: தமிழக சட்டசபை உறுப்பினர்கள் அனைவருக்கும் இமெயில்கள் முகவரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதி எம்.எல்.ஏக்களுக்குமான இந்த அதிகாரப்பூர்வ இமெயில் முகவரிகளை தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை உருவாக்கிக் கொடுத்துள்ளது. இதை இன்று வீடியோ கான்பரன்சிங் மூலமாக முதல்வர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் முதல்வர் பேசுகையில், இந்த இமெயில் முகவரிகள் மூலம், மக்கள் பிரதிநிதிகள் மேலும் திறம்பட செயல்பட முடியும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கான பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இ கவர்னன்ஸ் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டத்தின்படி ஜாதிச் சான்றிதழ், வருவாய்ச்சான்றிதழ், இருப்பிட சான்று உள்ளிட்டவற்றை கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் இனி ஆன்லைனிலேயே பெறலாம்.
கிருஷ்ணகிரியைத் தொடர்ந்து அடுத்து அரியலூர், பெரம்பலூர், கோவை, திருவாரூர், நீலகிரி மாவட்டங்களுக்கும் பிறகு அனைத்து மாவட்டங்களுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
இதுபோக ஊரக பிபிஓ கொள்கையையும் முதல்வர் கருணாநிதி வெளியிட்டார்.