For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ஜெயலலிதாவைப் பார்த்தா பரிதாபமா இருக்கு!' - மு.க.அழகிரி பேட்டி

Google Oneindia Tamil News

Azhagiri
சென்னை: ஜெயலலிதாவைப் பார்த்து பரிதாபப்படுகிறேன் என்றார் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி.

மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நேற்று மாலை 5 மணிக்கு மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும்:

மதுரையில் நடந்த அ.தி.மு.க. கண்டன கூட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன?

அது அவர்கள் நடத்திய கூட்டம். அது பற்றி நான் எதற்கு கருத்து சொல்ல வேண்டும். அதை நான் விரும்பவில்லை.

மதுரை கூட்டத்தில் ஜெயலலிதா உங்களை கடுமையாக விமர்சனம் செய்துள்ளாரே?

அரசியல் நாகரீகம் தெரியாமல் மேடையில் வந்து ஏதோ உளறி சென்றதற்கு எல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை.

மதுரையில் அழகிரி ராஜ்ஜியம் நடப்பதாக ஜெயலலிதா கூறி உள்ளாரே?

யாரோ தப்புதப்பாக எழுதிக் கொடுத்ததை, சரியாக உள்ளதா என்று கூட விசாரிக்காமல் அந்த அம்மையார் அப்படியே 2 மணி நேரம் படித்துவிட்டு போயிருக்கிறார். ஒரு விதத்தில் அந்த அம்மையாரைப் பார்த்தா பரிதாபமா இருக்கு. யாராவது தவறாக சொன்னால் அதை நம்பக்கூடாது. உண்மையை விசாரித்துவிட்டு தான் முடிவு செய்ய வேண்டும். பேச வேண்டும்.

மதுரையை அ.தி.மு.க. கோட்டையாக மாற்றுவேன் என ஜெயலலிதா கூறி உள்ளாரே?

ஒருவேளை மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற படத்தில் வரும் கதையை பற்றி கூட்டத்தில் பேசியிருப்பார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X