லிவ்-இன் முறையில் வாழும் பெண்கள் ஜீவனாம்சம் பெற 4 உச்சவரம்புகள்-சுப்ரீம் கோர்ட்

Subscribe to Oneindia Tamil

Live In
டெல்லி: திருமணம் செய்து கொள்ளாமல் லிவ்-இன் முறைப்படி வாழும் பெண்கள் ஜீவானாம்சம் பெறுவதற்கு சில உச்சவரம்புகளை நிர்ணயித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வெறும் ஒரு நாள் இரவு அல்லது வார இறுதி நாட்களின் போது மட்டும் ஒன்றாக இருப்பதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது என்றும் அதிரடியாக தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜு, டி. எஸ். தாகுர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஒரு பெண் திருமணம் ஆகாமல் இருந்தாலும் ஜீவனாம்சம் பெற 4 தேவைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் அவர்களும் ஜீவனாம்சம் பெறலாம்.

1) அவர்கள் தம்பதிகளைப் போன்று இந்த சமுதாயத்திற்கு முன் வாழ்ந்திருக்க வேண்டும்.

2) அவர்கள் சட்டப்படி நிர்ணயித்திருக்கும் திருமண வயதடைந்தவர்களாக இருக்க வேண்டும்.

3) திருமணம் ஆகவில்லை என்றாலும் அவர்கள் சட்டப்படி திருமணம் செய்துகொள்ளும் தகுதி உடையவர்களாக இருக்க வேண்டும்.

4) அவர்கள் மனமொத்து தானாக ஒன்று சேர்ந்து வாழ்வதோடு உலகிற்கு முன் தம்பதிகளாக குறிப்பிட்ட காலம் வரை ஒன்றாக இருந்திருக்க வேண்டும்.

இந்த வரம்புகளை பூர்த்தி செய்வோர் ஜீவனாம்சம் பெறத் தகுதி உடையவர்கள் ஆவர் என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+