அமைச்சர், வாக்குச் சாவடி மீது தாக்குதல்-வன்முறையுடன் முடிந்த பீகார் 2ம் கட்ட தேர்தல்

மொத்தம் 45 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் 98.44 லட்சம் வாக்காளர்கள் கலந்து கொண்டனர். 623 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இவர்களில்46 பேர் பெண்களாவர். ஆறு மாவட்டங்களில் நடைபெறும் இத்தேர்தலுக்காக 10,315 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
காங்கிரஸும், பகுஜன் சமாஜ் கட்சியும் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. ஆளும் ஐக்கிய ஜனதாதளம் 28 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சியான பாஜக 17 தொகுதிகளிலும் களத்தில் நிற்கின்றன.
லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளம் 34 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சியான பாஸ்வானின் லோக் ஜன சக்திக் கட்சி 11 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
ஷூகர் மாவட்டத்தில் ஆறு போலீஸாரை மாவோயிஸ்ட் நக்சலைட்கள் கொன்றுள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.
சித்தமார்கி மாவட்டத்தில் ருன்னிசயத்பூர் தொகுதியில் 166வது வாக்குச் சாவடிக்குள் திடீரென மாவோயிஸ்டுகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அங்கிருந்த வாக்குப் பதிவு இயந்திரத்தை தீவைத்துக் கொளுத்தினர். பிற தேர்தல் பொருட்களையும் அடித்து
நொறுக்கி சூறையாடினர்.
பின்னர் அங்கிருந்த 3 தேர்தல் பணியாளர்களை கடத்திச் சென்றனர். அதேபோல ஒரு அமைச்சரும் தாக்கப்பட்டார்.
வன்முறை நடந்த வாக்குச் சாவடிப் பகுதிக்கு கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். அதற்குள் மாவோயிஸ்டுகள் தப்பி விட்டனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications