செல்போனில் படம் எடுத்ததாகக் கூறி மாணவரை தாக்கிய பேராசிரியர்கள்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் செல்போனில் படம் எடுத்ததாகக் கூறி கல்லூரி மாணவரை பேராசிரியர்கள் அடித்து உதைத்தனர். இதையடுத்து போலீசார் 3 பேராசிரியர்களைத் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி பொன்னாகரத்தைச் சேர்ந்த முருகப்பெருமாள் என்பவரின் மகன் ஜோசப் தினகரன். இவர் திருச்செந்தூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி. விலங்கியல் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இவர் கல்லூரி முதல்வர் அறை அருகே செல்போனை இயக்கியபடி சென்றாராம். அப்போது அங்கு நின்ற 3 பேராசிரியர்கள் ஜோசப் தினகரனை பார்த்து எப்படி எங்களை படம் எடுக்கலாம் என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் நான் படம் எதுவும் எடுக்கவில்லை, நம்பரைதான் பார்த்தபடி சென்றேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் இதை நம்பாத பேராசிரியர்கள் 3 பேரும் அவரை ரவுண்ட் கட்டி அடித்து உதைத்துள்ளனர்.
இதில் காயமடைந்த ஜோசப் தினகரன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி அந்த கல்லூரியைச் சேர்ந்த கணித பேராசிரியர் முனியப்பன, தாவரவியல் துறைத் தலைவர் ஹரிநாதன், கம்யூட்டர் சயின்ஸ் பேராசிரியர் ஜோசப் ராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிந்து அவர்களைத் தேடி வருகின்றனர்.
மாணவரை ஆசிரியர்கள் தாக்கிய சம்பவம் மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications