நாட்டின் நேரடி வரி வருவாய் ரூ.2 லட்சம் கோடியாக உயர்வு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்த நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் நாட்டின் நேரடி வரி வசூல் சென்ற ஆண்டைவிட 17.82 சதவீதம் அதிகரித்து ரூ.2.04 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
இந்த நேரடி வரியில் தனி நபர் வருமான வரி, நிறுவனங்களி்ன் வரி மற்றும் சொத்து வரி ஆகியவை அடங்கும்.
இந்த நிதியாண்டில் முதல் 7 மாதங்களில் வசூலான வரி வருமானம் ரூ. 2,04,351 கோடியாகும். கடந்த ஆண்டு இது ரூ. 1,73,447 கோடியாக இருந்தது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி காரணமாக இந்த வரி வருமானம் அதிகரித்துள்ளது. இந்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.5 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இது 7.4 சதவீதமாக இருந்தது.












Click it and Unblock the Notifications