திரினாமூல் காங். தலைவர் காரில் இருந்த மாவோயிஸ்ட் கைது: 20 வழக்குகளில் தொடர்புடையவர்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: 20 வழக்குகளில் தேடப்பட்டுவந்த மாவோயிஸ்ட் ஒருவரை திரினாமூல் காங்கிரஸ் தலைவர் ஒருவர் காரில் வைத்து நேற்று போலீசார் கைது செய்தனர்.

மேற்கு வங்க மாநிலம் வடக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ளூர் திரினாமூல் காங்கிரஸ் தலைவரின் காரில் இருந்து ஒரு மாவோயிஸ்டை கைது செய்தனர்.

இது குறித்து எஸ்.பி. மனோஜ் குமார் வர்மா கூறியதாவது,

மேற்கு வங்க மாநிலம் மதுபூரைச் சேர்ந்தவர் மாவோயிஸ்ட் கஞ்சன் தேப் சிங்க். அவர் அரசியல் தலைவர் ஆதரவுடன் சுற்றி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவரை கண்காணி்த்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று திரினாமூல் காங்கிரஸின் சல்போனி பிளாக் தலைவர் நேபால் சிங்கின் காரை போலீசார் பர்தார்கும்குமி என்ற இடத்தில் நிறுத்தினர். அப்போது அதற்குள் இருந்த கஞ்சன் தேப் சிங்கை கைது செய்தனர்.

அவர் மீது ஏற்கனவே இரட்டை கொலைகள் உள்ளிட்ட 15 முதல் 20 வழக்குகள் உள்ளன. கடந்த ஆண்டு நடந்த கலைமுரி முகாம் தாக்குதலில் அவருக்கும் பங்குண்டு என்று அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+