2011ல் புதுச்சேரியிலும், 2016ல் தமிழகத்தில் பாமக ஆட்சி அமையும்-ராமதாஸ்
புதுச்சேரி: தமிழகத்தில் 2011-ல் அங்கு ஆட்சி அமைக்க முடியாது. அதற்கடுத்த தேர்தலில் பா.ம.க. ஆட்சி தமிழகத்தில் அமையும். ஆனால் 2011-ல் புதுச்சேரியில் பா.ம.க. ஆட்சி அமையும் என்று பேசியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
புதுச்சேரி மாநில பா.ம.க. கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:
பா.ம.க. ஒரு வித்தியாசமான கட்சி ஆகும். நிறைய வித்தியாசம் இருக்கிறது. அதை சொல்வதற்கு நேரம் இல்லை. புதுச்சேரி மக்களின் நம்பிக்கையை பெற்று ஆட்சி பீடத்தில் அமர வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. புதுச்சேரியில் வருகிற 2011-ம் ஆண்டு நடைபெறும் பொதுத்தேர்தலில் நாம் வெற்றி பெற்று ஆள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
10 தொகுதியில் நாம் வெற்றி பெற்றால் நமது தலைமையில் தான் ஆட்சி அமையும். கொள்கை மாறாமல், அணி மாறாமல் ஆளுங்கட்சிக்கு துதிபாடாமல் புதுச்சேரியில் செயல்படும் ஒரே கட்சி பா.ம.க. தான். நமது பொறுப்பாளர்கள் அறிவு கூர்ந்தவர்கள். துணிவு மிக்கவர்கள். உழைப்பில் தான் கொஞ்சம் குறை உள்ளது. அதனை சரி செய்தால் ஆட்சி நம்மிடம் தான்.
கட்சியை இளைஞர்கள், இளம்பெண்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வந்து இருக்கிறோம். 2011-ல் அங்கு ஆட்சி அமைக்க முடியாது. அதற்கடுத்த தேர்தலில் பா.ம.க. ஆட்சி தமிழகத்தில் அமையும். ஆனால் 2011-ல் புதுச்சேரியில் பா.ம.க. ஆட்சி அமையும்.
வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்கள், இளம் பெண்களை பா.ம.க.வில் சேர்த்தால் ஆட்சி மாற்றம் நிச்சயம். 15 தொகுதிகளை எடுத்து கொண்டு வேலை செய்தால், தனித்து நின்றாலும் கூட 10 தொகுதியிலும் வெற்றி நிச்சயம்.
கூட்டணிக்கு தலித் இளைஞர்களை சேர்த்து கொள்ளலாம். இதற்காக ஒரு ஒப்பந்தம் போட்டு கொள்ளலாம். தலித் இளைஞர்களுக்கும், வன்னிய இளைஞர்களுக்கும் நாங்களும் ஆள வேண்டும் என்ற எண்ணம் வந்தால் ஆட்சி மாற்றம் நிச்சயம் ஏற்படும். கட்சி என்றால் நல்லது, கெட்டது இருக்கும். எது என்றாலும் உறுதியாக கடைசி வரை இருக்க வேண்டும். சுய நலத்திற்காகவும், பதவிக்காகவும் தனி அணி செல்வதில் சரியல்ல.
சாதி வாரியாக மக்கள் கணக்கெடுப்பு நடத்தாவிட்டால் எந்த பயனும் இல்லை. தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுத்து உள்ளோம். புதுச்சேரி முதல்வர், சாதிவாரி கணக்கெடுப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்து உள்ளதாக கூறியுள்ளார். இது நல்ல முயற்சி. புதுச்சேரி அரசின் ஆணையை தமிழக முதல்வரிடம் நேரில் கொடுத்து இருக்கிறோம்.
புதுச்சேரியில் உள்ள 70 சதவீத வன்னிய மக்கள் பா.ம.க.வுக்கு தான் வாக்களிப்போம் என்று உறுதி அளித்தால் பா.ம.க. நிச்சயம் ஆட்சி அமைக்கும்.
மக்களை பற்றி சிந்திக்கும் ஒரே கட்சி பா.ம.க. தான். எனவே புதுச்சேரி மக்கள் எங்களுக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு தாருங்கள். புதுச்சேரியை மாற்றி காட்டுகிறோம்.
வன்னியர்களுக்கு சமூகம், பொருளாதார மாற்றம் எதிர்காலத்தில் கிடைக்க பா.ம.க.வுக்கு வாருங்கள். புதுச்சேரியில் பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் சாராயம் மற்றும் கள்ளுக்கடைகளை மூடுவோம் என்றார் ராமதாஸ்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications