For Daily Alerts
Just In
குஜராத் ரசாயணத் தொழிற்சாலையில் திடீர் தீ: ஒருவர் பலி, 4 பேர் படுகாயம்
வதோதரா: குஜராத்தில் உள்ள ரசாயணத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானார், 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
குஜராத் மாநிலம் நந்திசேரியில் ஊருக்கு வெளியே உள்ள ரசாயணத் தொழிற்சாலையில் இன்று அதிகாலை திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடித் தீயை அணைத்தனர். இதில் ஒருவர் பலியானார். மேலும், 4 பேருக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன என்று மாவட்ட ஆட்சியர் விஜய் நெஹ்ரா தெரிவித்தார்.
இந்த விபத்திற்கான காரணம் தெரியவில்லை. இதில் இறந்தவர் யார் என்றும் தெரியவில்லை என்று வதோதரா முனிசிபாலிட்டியின் தலைமை தீயணைப்பு அதிகாரி ஹெச். ஜே. தபாரியா தெரிவித்தார்.
Story first published: Monday, November 22, 2010, 15:00 [IST]