ரயில்வே பணியால் பாசனக்கால்வாய் துண்டிப்பு: விவசாயம் பாதிக்கும் அபாயம்
நாங்குநேரி: நாங்குநேரி ரயில்வே மேம்பாட்டு பணியின்போது பாசனக் கால்வாய் துண்டிக்கப்பட்டதால் விவசாயம் பாதிக்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
நாங்குநேரி ரயில் நிலைய மேம்பாட்டு பணியில் நடைபாதை சீரமைப்பு பணி முடியும் தருவாயில் உள்ளது. இதில் நாங்குநேரி பெரியகுளத்தில் இருந்து தண்டவாளத்தின் அடியிலுள்ள பாலத்தின் வழியாக விவசாய நிலங்களுக்கு செல்லும் பாசனக் கால்வாய் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுமார் 400 ஏக்கர் நஞ்சை நிலங்களுக்கு பாசனம் தடைப்பட்டு விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பருவமழை துவங்கியுள்ள இந்த தருணத்தி்ல் பாசனக் கால்வாய் துண்டிக்கப்பட்டதால் விவசாயம் செய்ய முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, துண்டிக்கப்பட்ட கால்வாயை சீரமைக்கக் கோரி நாங்குநேரி பெரியகுளம் நீரனினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் முத்துடையார், நாங்குநேரி பேரூராட்சி தலைவர் பால்சங்கரன் ஆகியோர் தலைமையில் விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளனர்.
பெரியகுளம் நிறைந்து தண்ணீர் வரத்துவங்கும் முன் இக்கால்வாயை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.