For Daily Alerts
Just In
ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய நீரா ராடியாவிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை
பல்வேறு முக்கிய அரசியல் பிரமுகர்களுடன் நீரா உரையாடிய ஆடியோ தகவல்கள் அமலாக்கப் பிரிவிடம் சிக்கியுள்ளது. சமீபத்தில் முன்னாள் அமைச்சர் ராஜா, கனிமொழி உள்ளிட்டோருடன் நீரா பேசியதன் ஆடியோ பதிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த நிலையில் தற்போது ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக நீராவிடம் அமலாக்கப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணைக்கு வராமல் அவர் நீண்ட நாட்களாக இழுத்தடித்து வந்தார்.
இன்று காலை அமலாக்கப் பிரிவு அலுவலகத்திற்கு வந்தார் நீரா. அவரிடம் அவருடைய நிறுவனத்திற்கும், 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை பெற்ற நிறுவனங்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
ராடியாவுக்கும், ராஜாவுக்கும் இடையிலான பேச்சு குறித்தும் விசாரிக்கப்படட்து.
Comments
Story first published: Wednesday, November 24, 2010, 17:42 [IST]