அம்பத்தூர்-திருவான்மியூர் இடையே 3-வது மெட்ரோ பாதை-அரசு பரிசீலனை

சென்னை நகரில் போக்குவரத்து நெரிசல் அதிக அளிவில் உள்ளது. இதை குறைக்க முதல் மற்றும் இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. இதில் முதல் கட்டத்தில் 2 பாதைகள் அதுவும் 2 வகையாக அமைக்கப்படுகின்றன.
முதல்பாதை சென்னை சென்டிரலில் இருந்து பெரியார் சாலை, வேப்பேரி, கீழ்பாக்கம் மருத்துவமனை, அமைந்தகரை, ஷெனாய்நகர், அண்ணாநகர் கிழக்கு, அண்ணாநகர் 2-வது அவென்யூ, திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி, அசோக்நகர், சிட்கோ, ஆலந்தூர் வழியாக பரங்கி மலை வரை அமைக்கப்படுகிறது. 22 கி மீ தூரம் கொண்ட இந்த பாதை சில இடங்களில் உயரமாகவும், சில இடங்களில் பூமிக்கு அடியிலும் அமைக்கப்படும்.
தற்போது கோயம்பேட்டில் இருந்து அசோக்பில்லர் வரை ரயில் பாலம் அமைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது.
23.1 கி மீ தூரம் கொண்ட இரண்டாவது பாதை வண்ணாரப்பேட்டையில் இருந்து பிராட்வே, (பிரகாசம் சாலை), சென்னை சென்டிரல் ரயில் நிலையம், ரிப்பன் மாளிகை, கூவம் ஆறு, அரசினர் தோட்டம், தாராப்பூர் டவர், ஸ்பென்சர், ஜெமினி, அண்ணாசாலை, சைதாப்பேட்டை, கிண்டி வழியாக விமான நிலையம் வரை அமைக்கப்படும்.
இதற்கிடையே அம்பத்தூர்- திருவான்மியூர் இடையே 3-வது கட்ட மெட்ரோ ரெயில் பாதை அமைப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. இது இன்னர் ரிங்ரோடு, ஆற்காடு சாலை, பனகல்பார்க், எல்டாம்ஸ் ரோடு, லஸ் சர்ச் ரோடு, ஆர்.கே.பட் ரோடு, அடையாறு பாலம், லட்டீஸ் பிரிட்ஜ் ரோடு வழியாக அமைக்க ஆலோசனை நடந்து வருவதாக மெட்ரோ ரயில் வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications