பிரதமர் அறிவுரைகளை மதிக்கவில்லை ராஜா-மத்திய அரசு அதிரடி பல்டி!

2ஜி ஸ்பெக்ட்ரம் விவாகரத்தில் அனைத்துத் தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்களை சம்பாதித்து வருகிறது மத்திய அரசு. முதலில் உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனங்களை சந்தித்தது. தற்போது கடந்த 2 வாரங்களாக ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஜேபிசி விசாரணை அவசியம் என்று கோரி நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்து வருகின்றன எதிர்க்கட்சிகள்.
பிரதமர் மன்மோகன் சிங் இதுவரை இந்த விவகாரத்தில் வாய் திறந்து பேசாமலேயே உள்ளார். ஆனால் ராஜாவைக் கைவிடாமல் தொடர்ந்து அவருக்கும் சேர்த்தே ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் வாதாடி வருகிறது மத்திய அரசு. சமீபத்தில் கூட முரசொலி மாறன் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் ராஜாவைத் தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறுவது போல நடந்து கொண்டார். இதையும் எதிர்க்கட்சிகள் சர்ச்சையாக்கின.
இந்த நிலையில், தற்போது மத்திய அரசு அதிரடி அந்தர் பல்டியாக ராஜாவை கீழே தூக்கிப் போட்டுள்ளது. மொத்தப் பழியையும் தற்போது ராஜா மீது திருப்பும் வகையில் மத்திய அரசு ஒரு பதில் மனுவை இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இதுகுறித்து சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம், சுப்ரீம் கோர்ட்டில் கூறுகையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக பிரதமரும், சட்ட அமைச்சரும் சில கருத்துக்களை வைத்திருந்தனர். அதற்கு தொலைத் தொடர்பு அமைச்சகம் (ராஜா) உரிய முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் பிரதமரின் அறிவுரைகளை தொலைத் தொடர்பு அமைச்சர் பின்பற்றவில்லை. மதிக்கவில்லை.
இந்த விவகாரத்தில் தொலைத் தொடர்புத்துறை மிகவும் வெளிப்படையான துறையாக இருந்திருக்க வேண்டும் என்றார்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் பிரதமருக்காக முதலில் கோபால் சுப்ரமணியம்தான் ஆஜராகி வந்தார். பின்னர் அவரது செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்த அரசு, அட்டர்னி ஜெனரலை இதில் இறக்கியது. தற்போது தொலைத் தொடர்புத் துறைக்காக ஆஜராகி வருகிறார் கோபால் சுப்ரமணியம் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜாவை அம்போ என கைவிடும் வகையில் கோபால் சுப்ரமணியம் இன்று உச்சநீதிமன்றத்தில் கூறியிருப்பது திமுக வட்டாரத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications