பிரதமர் அறிவுரைகளை மதிக்கவில்லை ராஜா-மத்திய அரசு அதிரடி பல்டி!

2ஜி ஸ்பெக்ட்ரம் விவாகரத்தில் அனைத்துத் தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்களை சம்பாதித்து வருகிறது மத்திய அரசு. முதலில் உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனங்களை சந்தித்தது. தற்போது கடந்த 2 வாரங்களாக ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஜேபிசி விசாரணை அவசியம் என்று கோரி நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்து வருகின்றன எதிர்க்கட்சிகள்.
பிரதமர் மன்மோகன் சிங் இதுவரை இந்த விவகாரத்தில் வாய் திறந்து பேசாமலேயே உள்ளார். ஆனால் ராஜாவைக் கைவிடாமல் தொடர்ந்து அவருக்கும் சேர்த்தே ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் வாதாடி வருகிறது மத்திய அரசு. சமீபத்தில் கூட முரசொலி மாறன் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் ராஜாவைத் தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறுவது போல நடந்து கொண்டார். இதையும் எதிர்க்கட்சிகள் சர்ச்சையாக்கின.
இந்த நிலையில், தற்போது மத்திய அரசு அதிரடி அந்தர் பல்டியாக ராஜாவை கீழே தூக்கிப் போட்டுள்ளது. மொத்தப் பழியையும் தற்போது ராஜா மீது திருப்பும் வகையில் மத்திய அரசு ஒரு பதில் மனுவை இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இதுகுறித்து சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம், சுப்ரீம் கோர்ட்டில் கூறுகையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக பிரதமரும், சட்ட அமைச்சரும் சில கருத்துக்களை வைத்திருந்தனர். அதற்கு தொலைத் தொடர்பு அமைச்சகம் (ராஜா) உரிய முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் பிரதமரின் அறிவுரைகளை தொலைத் தொடர்பு அமைச்சர் பின்பற்றவில்லை. மதிக்கவில்லை.
இந்த விவகாரத்தில் தொலைத் தொடர்புத்துறை மிகவும் வெளிப்படையான துறையாக இருந்திருக்க வேண்டும் என்றார்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் பிரதமருக்காக முதலில் கோபால் சுப்ரமணியம்தான் ஆஜராகி வந்தார். பின்னர் அவரது செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்த அரசு, அட்டர்னி ஜெனரலை இதில் இறக்கியது. தற்போது தொலைத் தொடர்புத் துறைக்காக ஆஜராகி வருகிறார் கோபால் சுப்ரமணியம் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜாவை அம்போ என கைவிடும் வகையில் கோபால் சுப்ரமணியம் இன்று உச்சநீதிமன்றத்தில் கூறியிருப்பது திமுக வட்டாரத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications