கோவை கொலை வழக்கில் ஜான்பாண்டியன் உள்ளிட்ட 5 பேர் விடுதலை
திருநெல்வேலி: கோவை நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஜான் பாண்டியன் உள்ளிட்ட 5 பேரை உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ளது.
கடந்த 1993ம் ஆண்டு கோயம்புத்தூர் ஆர்.எஸ். புரம் பகுதியில் நிதி நிறுவன அதிபரான விவேக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவர் ஊத்துக்குளி ஜமீன் பரம்பரையைச் சேர்ந்தவர்.
இந்தக் கொலை தொடர்பாக ஜான் பாண்டியன், தொழிலதிபர் வெங்கட்ரமணா உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜான்பாண்டியன் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த 2003ம் ஆண்டு முதல் ஜான் பாண்டியன் சிறையில் இருந்து வருகிறார்.
இந்த தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஸ்ரீபுர்கார், ஸ்ரீயாத் ஜோசப் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜான் பாண்டியன் உள்ளிட்ட 5 பேரை விடுவித்து தீர்ப்பளித்தனர்.












Click it and Unblock the Notifications